84. அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயில்
இறைவன் பசுபதீஸ்வரர்
இறைவி மங்கள நாயகி
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், காமதேனு தீர்த்தம்
தல விருட்சம் அரச மரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருஆவூர் பசுபதீஸ்வரம், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'ஆவூர்' என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள சுந்தர பெருமாள் கோயில் என்னும் ஊரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரத்திலிருந்து தென்மேற்கே 7.5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Avoor Gopuramவசிஷ்ட முனிவரிடம் பெற்ற சாபத்தால் காமதேனு இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றது. இதனால் இத்தலம் 'ஆவூர் பசுபதீஸ்வரம்' என்று பெயர்.

மூலவர் 'பசுபதீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். இக்கோயிலில் இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. 'மங்கள் நாயகி' மற்றும் 'பங்கஜவல்லி' என்னும் திருநாமங்களுடன் அழகாகக் காட்சித் தருகின்றனர்.

பிரகாரத்தில் நிருத விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் வில்லேந்திய சுப்பிரமண்யர், சப்த கன்னியர், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

Avoor Bairavarஇக்கோயிலில் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், காள பைரவர், உன்மத்த பைரவர் என்று ஐந்து பைரவர்கள் ஒரே சன்னதியில் உள்ளனர். இவ்வாறு ஐந்து பைரவர்கள் ஒரே இடத்தில் காட்சி தருவது வேறு எந்தக் கோயிலிலும் கிடையாது.

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று.

பிரம்மா, இந்திரன், சப்த ரிஷிகள், தேவர்கள், சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com